பக்கம் எண் :

120கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

இயற்கையின் விளைவெனும் உடைமையெலாம்
    யாவரும் பெறஒரு தடையிலையாம்
செயற்கையில் அவைதனி யுடைமையெனில்
    சிறியவர் செயலது மடைமையுமாம்

நலமுற அனைவரும் கூடிடுவோம்
    நாட்டினில் அமைதியை நாடிடுவோம்
மலர்விழி சோலையைத் தேடிடுவோம்
    மனங்கவர் குயிலெனப் பாடிடுவோம்