| பாடுங்குயில் (பாடல்கள்) | 123 |
4 எப்படிப் பொறுப்பேன்! இருளுடன் ஒளியையுங் காண்பேன் - உலகின் இயல்பெனும் மனநிலை பூண்பேன் வறுமையும் வளமையுங் கண்டால் - மாந்தன் வாழ்வினில் எப்படிப் பொறுப்பேன்? மருதமும் பாலையும் உண்டு - விடுவேன் மண்மிசை இயல்பெனக் கொண்டு உரியவன் எளியவன் இருத்தல் - இயல்பென் றுரைத்திடின் எப்படிப் பொறுப்பேன்? தடமலை சமதரை இருக்கும் - அவையும் தரைதனில் இயல்பென இருப்பேன் குடிலுடன் மாளிகை இருப்பின் - நெஞ்சம் குமுறா தெப்படி யிருக்கும்? பூவுடன் பிஞ்சுகள் மடியும் - அஃதும் பூமியில் இயல்பென முடியும் சாவுகள் இளமையைத் தொடரின் - உள்ளம் சமநிலை எப்படி யடையும்? மலர்தனிற் பனிநீர் குந்தும் - அதுதான் மனமகிழ் அழகினைச் சிந்தும் உலரிய விழிநீர் சிந்தின் - என்றன் உளமோ கடலெனப் பொங்கும் |