பக்கம் எண் :

124கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

விரித்திடும் தோகையின் கண்கள் - காணின்
    விளைத்திடும் என்மனம் பண்கள்
தரித்திடும் ஆடையிற் கண்கள் - காணின்
    தலைக்கொளும் ஆயிரம் புண்கள்

முழுமதி வடிவினில் குறையும் - அதுவும்
    முழுமையும் ஒருநாள் மறையும்
உழுபவன் வடிவினில் குறையின் - என்றன்
    உளமோ கனலாய்ப் புகையும்

பசியுடன் நலிவுகள் மிகுத்தால் - இங்கே
    பாய்புலி யாய்மனஞ் சினக்கும்
இசையா வுலகினைப் படைத்தால் - இனியும்
    எப்படி என்மனம் பொறுக்கும்?