பக்கம் எண் :

126கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

நூறு நூறு சாதிகள் - இங்கு
    நுவலுங் கோடி வீதிகள்
வேறு வேறு நீதிகள் - சொல்லி
    வேத மென்றும் ஓதினாய்

ஏழை செல்வன் ஏனெனில் - அந்த
    இறைவன் என்று வீணிலே
மோழை வாதங் கூறினாய் - உன்றன்
    மூடம் என்று மாறுமோ?

நெஞ்சின் மாசை ஒட்டுவாய் - நல்ல
    நினைவை யங்கே கூட்டுவாய்
வஞ்சம் நீக்கி வீட்டுவாய் - செய்கை
    வாய்மை யாக்கிக் காட்டுவாய