பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)127

6
நானொரு பாடும் பறவை

நானொரு பாடும் பறவை - பொழிவேன்
    நாடொறும் பாடல் நறவை
வானில்வி ரிப்பேன் சிறகை - மறவேன்
    வாழ்ந்திடும் மண்ணின் உறவை

பாடுவ தென்றன் தொழிலாம் - அன்பும்
    பண்பும் எனதிரு விழியாம்
கூடிடும் நட்பெனும் மழையில் - நாளும்
    குளித்துளம் மகிழ்வதென் வழியாம்

சிந்தனை விரிசிற குடையேன் - காற்றுச்
    சீறிடல் கண்டுளம் உடையேன்
முந்திய தமிழிசை நடையில் - கவிதை
    மொய்ம்புறப் பாடுதல் உடையேன்

கொள்கை கொணர்ந்ததை முடைவேன்-அந்தக்
    கூட்டினில் வந்தே அடைவேன்
தெள்ளிய தமிழ்மழை விழைவேன்- என்றும்
    தித்தித் திடஇசை பொழிவேன்

ஈயென் எதிலும் அமரேன் - நறுமலர்
    எதுவோ அதையே நுகர்வேன்
வாயினில் வந்ததை உளறேன்- துன்பம்
    வாய்த்திடின் அதனால் தனரேன்