பக்கம் எண் :

128கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

வாழ்வினைப் பெரிதாக் கருதேன்- என்றும்
    வாய்மையை மீறித் திரியேன்
தாழ்விலுஞ் செம்மைக் குரியேன்-என்றன்
    தாயகங் காக்குங் குறியேன்

விண்மிசை யாண்டுந் திரிவேன்-அங்கே
    விந்தைகள் ஆயிரம் புரிவேன்
மண்மிசை என்றும் வருவேன்-இன்பம்
    மாநிலம் எய்திடத் தருவேன்

பாடிடு வேன்புது வுலகை- அங்கே
    படைத்திடு வேன்பொது வுடைமை
சாடிடு வேன்வரும் படையைத்- தாக்கிச்
    சமர்புரி வேன்அது கடமை