| பாடுங்குயில் (பாடல்கள்) | 129 |
7 எனது நேரம் நினைவுடன் வாழ்வது சிலவேளை-கனவில் நீந்திடப் போவது பலவேளை முனைவுடன் வாழ்வது சிலவேளை-துயரங் மூழ்கிடத் தாழ்வது பலவேளை நட்பில் திளைப்பது சிலவேளை -தனியே நலிந்து கிடப்பது பலவேளை கற்பில்* களிப்பது சிலவேளை - துயரங் கண்டு கழிப்பது பலவேளை சிரிப்பினில் வாழ்வது சிலபோது-கண்ணீர் சிந்தித் தேய்வது பலபோது நெருப்பினில் காய்வது பலபோது-இன்பம் நெஞ்சினில் தோய்வது சிலபோது நல்லன காண்பது சிலபோது-நாட்டில் நாணயங் காண்பது சிலபோது அல்லன தோன்றுதல் பலபோது-மண்ணில் அல்லலுந் தோன்றுதல் பலபோது என்னலம் நெஞ்சினில் ஒருநாளே-மக்கள் இனநலம் மிஞ்சிடும் பலநாளே என்னகம் வஞ்சியும் ஒருநாளே-நினைவில் ஏழையர் பஞ்சையர் பலநாளே
* கற்பில் - படிப்பில் |