பக்கம் எண் :

காவியப் பாவை13

8
உயிர்த் தமிழே!
-

முன்னைப் பழம் பொருளே-வேந்தர்
மூவர் உயிர்த் தமிழே!
கன்னற் சுவை யமுதே-என்றன்
கண்ணின் மணி விளக்கே!
என்னைப் பழிப்பவனை-நான்
ஏதும் நினைப்பதில்லை
உன்னைப் பழிப்பவனைப்-பகையா
உள்ளம் நினைக்கு தம்மா!

தீங்குனைச் சாரு தென்றால்-என்றன்
சிந்தை கொதிக்கு தம்மா!
பாங்குனை மேவு தென்றால்-நெஞ்சம்
பாய்ந்து மகிழு தம்மா!
ஆங்கிலம் கற்றவரும்-வந்த
அயல்மொழி கற்றவரும்
ஈங்குப் புறக்கணித்தார்-அறிவை
என்று பெறுவாரோ?

தாயைப் பழித்துரைத்தால்-நெஞ்சம்
தாங்கிட ஒப்பவில்லை
நாயவன் என்றுமிழ-உணர்வு
நாடிப் பெருகுதம்மா!