பக்கம் எண் :

132கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

இன்ப மெனுங்கடல் பாய்ந்திருப்பேன்-அங்கே
    எத்தனை எத்தனை ஆய்ந்திருபேன்
மன்பதை உய்ந்திட ஈந்திருப்பேன்-நீயேன்
    வந்தரு ளாமலே ஒய்ந்திருந்தாய்?

உன்னை விடுத்தொரு சுற்றமில்லை-நெஞ்சில்
    ஒட்டிய வேறொரு பற்றுமில்லை
என்னைப் புரப்பதில் குற்றமில்லை-அம்மா
    ஏங்குதல் நீதியோ பெற்றபிள்ளை?