| பாடுங்குயில் (பாடல்கள்) | 135 |
11 பொங்கிக் கிளர்ந்தது வீரம் (சீனம் நம்மைத் தாக்கியபோது பாடப்பட்டது) வெள்ளையர் ஆண்டிட வீழ்ந்துகிடந்தது நாடு-கதை வேறுநடந்தது வெந்தும டிந்தது பாடு கொள்ளையர் மீண்டிவண் கூடிப்புகுந்திட லாமோ-அவர் கொட்டம டங்கிடக் கூடிஎ திர்த்திடு வோமே ஏழைய ராயினும் கோழையரல்லர்நம் மாந்தர்-படை ஏற்றம்மி குந்திடப் போரிற்ப டைக்கலம் ஏந்திக் காளைகள் ஆயிரம் காணுமப கைப்புலம் நீந்தும்-ஒரு காவல்பு ரிந்திடும் சேனைபெ ரும்புகழ் ஏந்தும் சங்கம்மு ழங்கிட வெங்களங் கண்டிடும் வீரர்-எம் சந்ததி சந்ததி யாகவ ளர்ந்திடும் சூரர் தங்களைப் பெற்றிடுந் தாயகங் காத்திடுந் தீரர்-அவர் தாவியெ ழுந்திடின் ஒடிவரும்பகை தீரும் சாவுக்க ளந்தனில் ஆடிக்க ளித்திடும் நேரம்-எனச் சங்கமொ லித்தது பொங்கிக் கிளர்ந்தது வீரம் ‘சூ’வைவி ரட்டிடச் சூடுபி டித்தது நாட்டில்-ஒரு சுட்டுவி ரற்கிடை விட்டுக்கொ டுத்திட மாட்டோம்.
* ‘சூ’ -சூயன்லாய் |