| பாடுங்குயில் (பாடல்கள்) | 139 |
14 ஒற்றுமையா? ஒருமைப்பாடா? ஒற்றுமை என்றொரு சொல்லுண்டு-மேலும் ஒருமைப் பாடென ஒன்றுண்டு சற்றே அவற்றின் பொருள் கண்டு-நின்பால் சாற்றிடுவேன்கேள் மனங்கொண்டு கட்டிய மாலைகள் தொங்கும்பார்-அவற்றில் கண்கவர் பூக்கள்வி ளங்கும்பார் மொட்டுடன் முல்லைது லங்கும்பார்-இன்னும் மூவகைப் பூவுமி லங்கும் பார் எத்தனை எத்தனை வண்ணம்பார்-நெஞ்சில் இன்பம் விளைந்திடப் பண்ணும்பார் அத்தனை அத்தனை வண்ணப்பூ-மாலை ஆகிடச் சேர்ந்ததை எண்ணிப்பார் மாலையிற் சேர்ந்தவை நின்றாலும்-தத்தம் மணத்தோ டுறுபெயர் குன்றாமல் கோலமு றத்தொடர்ந் தொன்றாகும்-இதுவே கொண்டிடும் ஒற்றுமை என்றாகும் பாலொடு சர்க்கரை ஒன்றானால்-நாமும் பருகிட வேசுவை நன்றாகும் பாலிடு சர்க்கரை என்னாகும்?-வடிவும் பண்டைய பேரதும் இன்றாகும் |