140 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
ஒன்றனுள் ஒன்றுக ரைந்தழியும்-தம்பி ஒன்றே வளரம றைந்தொழியும் இன்றொரு மைப்பா டெனமொழியும்-சொல்லில் *ஏய்பொருள் தானிது பாரறியும் நம்முடன் மற்றவர் தாழ்வின்றி-வாழ நாடுவ தொற்றுமை வாழ்வன்றோ? நம்மழி வேபிறர் வாழ்வென்றால்- அதுதான் நாடும் ஒருமைப் பாடென்பார் ஒற்றுமை என்பதை வேண்டுதியோ?-தம்பி ஒருமை எனுமது வேண்டுதியோ? உற்றொரு தீர்வினைத் தேர்ந்தெடுநீ-அந்த உண்மையை நெஞ்சினில் பூண்டெழுநீ.
* ஏய் - பொருந்திய |