பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)141

15
போது விரிந்தது

செவிலி

துள்ளும்* பிணை யனையாள்-இன்று
புள்ளி மயில் நடையாள்!-மனம்
கள்ள மிலா தமகள்-இன்று
வெள்கும் முக முடையாள்!

ஆடை அணிவகையில்...மனம்
நாடுதல் இன் றியவள்-எங்கும்
ஆடி வருபவள் தான்-முன்னர்
ஓடித் திரி பவள்தான்

ஏந்திழை தா னெடுத்தே-கருங்
கூந்தல் தனை முடித்தாள்-அதில்
பூந்துணர் சேர்த் தமைத்தாள் - புதுச்
சாந்துகள் மேற் படைத்தாள்!

கண்ணில்மை பூ சுகிறாள்-கடைக்
கண்களில் பேசுகிறாள் - இதழ்ப்
புன்னகை வீசுகிறாள்-மொழி
என்னென்ன பேசுகிறாள்!

செந்தளிர் போ லுடலில்-நறுஞ்
சந்தனம் நீ வுகிறாள்-தனம்
விந்தை தரும் வகையில்-இரு
பந்தென விம் முகிறாள்!


* பிணை - பெண்மான்