பக்கம் எண் :

148கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

கனிமலர்க் காவென நான் வந்தேன்-பண்பு
    கருகிடுந் தாவென ‡வேநொந்தேன்
தனியுரி மைக்கவி நானம்மா-துன்பம்
    தரும்அடி மைத்தொழில் ஏனம்மா?

புனிதத் தொழிலென நான்கொண்டேன் - இன்று
    புன்மைச் செறிவுள தேகண்டேன்
இனியித் தொழில் எனக் கேனம்மா?-கவிதை
    எழுதும் பணிபுகு வேனம்மா.


‡ தாவு - இடம்