பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)149

19
பெற்றோர் புலம்பல்

உண்ணுஞ் சுவையமு தூட்டிவிட்டோம் - நன்மை
    ஒதிடும் பள்ளியில் கூட்டிவிட்டோம்
எண்ணம் அனைத்தையும் வாட்டிவிட்டீர்-ஊரார்
    ஏளனஞ் செய்திடக் காட்டிவிட்டீர்!

கற்றவர் சொல்லையுங் கேட்பதில்லை-வீணே
    காலங்கள் போவதும் பார்ப்பதில்லை
பெற்றவர் சொல்லையும் ஏற்பதில்லை - நல்ல
    பிள்ளைகள் யாரையும் சேர்ப்பதில்லை!

வேடிக்கை செய்வதும் எல்லையில்லை - பள்ளி
    வேளைதொறுஞ் சென்று கற்பதில்லை
நாடிக்கை வண்ணமே காட்டிநின்றால்-உங்கள்
    நாளை நடப்பென்ன காளைகளே?

சட்டையில் மாற்றங்கள் கண்டுவிட்டீர் - நல்ல
    சால்பையும் ஐயையோ கொன்றுவிட்டீர்!
*அட்டைகள் தூக்கலில் வென்றுவிட்டீர் - ஆனால்
    ஆகா நெறிக்கன்றோ சென்றுவிட்டீர்

பாழ்வினை எத்தனை செய்துவிட்டீர்-அந்தோ
    பள்ளியில் கல்வியைக் கொய்துவிட்டீர்
யாழிசை கேட்டிடக் காத்திருந்தோம்-ஆனால்
    ஆந்தையின் கூக்குரல் கேட்டுநொந்தோம்

பெற்றவர் நாங்களோவாழ்ந்துவிட்டோம்-எங்கள்
    பிள்ளைகள் நீங்களோ தாழ்ந்துகெட்டால்
உற்றதை எப்படிக் கண்டிருப்போம்?-வாயை
    ஊமைகள் போலவா கொண்டுநிற்போம்?

4.5.1973


* ஊர்வலத்தில் அட்டை தூக்குவது