| பாடுங்குயில் (பாடல்கள்) | 151 |
21 நானொரு குழந்தை குடும்பம் எனக்கோர் நடைவண்டி-நல்ல கொள்கை வெறிதான் தொடர்வண்டி இடும்பை தவிர்த்திடும் முப்பாலே-என்னை இனிதே வளர்த்திடும் தாய்ப்பாலாம் ஆயும் மொழியே சிறுகோலி-அதனை அறிவால் தெறிப்பேன் குழிகோலி பாயும் குழியோ கவியாகும்-ஆடல் பார்த்து மகிழ்வது புவியாகும் பாமலர் என்றன் மழலைமொழி-பாட்டில் பாவும் பொருளே குவளைவிழி மாமழை வானந் தவழும்வழி-அங்கே மதியம் உருள்பந் தெனதுவழி காவியம் என்றன் மணல்வீடு- பொங்கும் கற்பனை யதுதான் சிறுசோறு வாவினி அம்மா மகிழ்வோடு-நெஞ்சின் வாழை விரிப்பேன் பரிவோடு உலகின் நிலையே தெரியவிலை-அங்கே உண்மையும் பொய்யும் புரியவிலை அலகில் விளையாட் டாடிடுவேன்-என்னோ டாரும் வரவிலை கூடிடவே |