பக்கம் எண் :

152கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

உள்ளஞ் சுடுசொல் பொறுப்பதிலை-சொன்னால்
    உடனே அழுவேன் வெறுப்பதிலை
கள்ளங் கவடந் தரிப்பதிலை-நீயேன்
    கனிவாய் மலர்ந்தே சிரிப்பதிலை?

அழுக்கா றாசை வெகுளியெனும்- நெஞ்சின்
    அழுக்குகள் யாவுங் கழுவினைநீ
இழுக்கா மானம் அருளறிவு -அணிகள்
    எத்தனை எத்தனை அருளினைநீ

நின்னருள் மாமழை பொழிந்திடுவாய்-நானும்
    நீங்கா ததனுள் நனைந்திடுவேன்
என்னுயிர் நீதான் தமிழம்மா-என்னை
    எடுத்தொரு முத்தம் அருளம்மா.