பக்கம் எண் :

154கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

உனைநான் என்றும் பிரியேன்-பிரியின்
    உயிர்தான் பெரிதோ தரியேன்
புனைபா உணர்வாற் பொழிவேன்-கண்டு
    பூமியும் நம்மைத் தொழுமே

வானிற் பறந்தே செல்வோம்-நம்பால்
    வருமிடர் அனைத்தும் வெல்வோம்
தேனில வுக்கதை சொல்வேன்-அங்கே
    தெள்ளிய பாநலம் கொள்வோம்

கண்ணுள் ஒளியாய் ஒன்றி-நீஎன்
    காலம் முழுதும் நின்றால்
மண்ணும் விண்ணும் ஒன்றே-என்றும்
    மருவிக் களிப்போம் நன்றே