158 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
ஆட்சியில் ஏறி அறநெறி காப்போர் ஆசையில் தவறுகள் இழைத்தா லென்ன மாட்சிமை அறியா வஞ்சகர் கூடி மற்றவர் பொருளைப் பறித்தா லென்ன குற்றங் குற்றந்தான்-ஒரு சட்டஞ் சட்டந்தான் கற்றவர் என்போர் கயமைகள் யாவும் கலைஎனும் பேரால் செய்தா லென்ன மற்றவர் இங்கே மடமைகள் யாவும் வயிறெனும் பேரால் செய்தா லென்ன குற்றங் குற்றந்தான்-ஒரு சட்டஞ் சட்டந்தான் வெள்ளியி லான விளக்கது கொண்டு வேய்ந்திடுங் கூரையில் வைத்தா லென்ன கொள்ளிக ளான விறகினைக் கொண்டு குடிசையில் நெருப்பினை வைத்தா லென்ன குற்றங் குற்றந்தான் -ஒரு சட்டஞ் சட்டந்தான் கன்னியர் தவறின் கண்டனம் வேறு காளையர் பிறழ்ந்தால் அதன்பெயர் வேறா? இந்நிலை கண்டார் அறமென ஓதார் இழிசெயல் ஒன்றினை யார்செய் தாலும் குற்றங் குற்றந்தான்-ஒரு சட்டஞ் சட்டந்தான் 1.2.1974 |