பக்கம் எண் :

160கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

சோறின்றிப் பற்பல நாள்கழித்தான்-சூழும்
    துன்பங்கள் போக்கிடத் தான்விழித்தான்
மாறொன்று கண்டிலன் வாழ்வினிற்றான்-அந்த
    மன்னவன் கற்பனை வாழ்வெடுத்தான்

சிந்தனை யாலவன் வான்பறப்பான்-தன்னைச்
    சேர்ந்திடும் துன்பமெ லாம்மறப்பான்
நொந்துழல் வேளையி லேசிரிப்பான்-அந்த
    நூலவன் வேதனை யார்துடைப்பார்?

21.9.1975