| பாடுங்குயில் (பாடல்கள்) | 165 |
28 துயரக் கவி குரல்மறந்த குயிலானான்-நீந்தும் குளமிழந்த கயலானான் இறகொடிந்த மயிலானான்-வாழ்வில் இடருழந்தே மயலானான் ஒலியிழந்த மணியானான்-பார்வை ஒளிமறைந்த விழியானான் கலிமிகுந்த துயராலே-பாவம் களைதுறந்த முகமானான் முகில்படர்ந்த நிலவானான்-தூசு முழுதடைந்த சிலையானான் துகில்வளைந்த படமானால்-சோகச் சுவரெழுந்த மனையானான் துயர்படர்ந்த கவியானான்-இன்பச் சுவைமறந்த கலையானான் புயலெழுந்த புவியானான்-துன்பப் புகைபுகுந்த விழியானான் நரம்பறுந்த யாழானான்-போரின் நடுவொடிந்த வாளானான் சுரும்பிருந்தே சூழாமல்-தேனின் துளியிழந்த பூவானான் கவிபொழிந்த முகிலம்மா-பாடற் கனிமிகுந்த பலவம்மா தவிதவிக்க விடினம்மா-யார்தான் தலைவனுக்குப் புகலம்மா? 12.9.1975 |