166 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
29 தமிழுக்கு என்னைத் தருவேன் 56-ஆம் பிறந்தநாளன்று பாடியது சுற்றிவ ளைத்திடு மெத்துய ரத்தையும் சுட்டுமு டித்ததை-எறிவேனே சொத்துந லத்தினை முற்றஇ ழப்பினும் சொற்றமி ழுக்கெனைத்-தருவேனே தொற்றிய ணைத்தவ ளைப்பெறு மக்களைத் தொட்டிடர் பற்றினும்-மருள்வேனோ? சொக்கிட வைத்திடும் எப்பொருள் கொட்டினும் தொட்டுளம் விற்றிட- வருவேனோ? கற்றம னத்தினிற் குற்றம கற்றிடும் கட்டழ குத்தமிழ்-மொழிமாதே கத்துக டற்புவி மெத்தம டத்தனம் கற்றடி மைப்படத்-தரியேனே பெற்றநி லத்தினர் உற்றஇ டுக்கணைப் பிய்த்தெறி யத்திறம்-அருள்வாயே பித்தம னத்தினர் நற்றெளி வுத்திறன் பெற்றிட நற்கவி-பொழிவேனே. 7.10.1975 |