பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)167

30
மாந்தன் கற்பனை

கற்பனைமிக்கான் உலகில்-அதனால்
    கடவுளைத் தந்தான் சிலையில்
அற்புதஞ் சொன்னான் கதையில்-நல்ல
    அறிவைம றந்தான் தரையில்

கல்வியைக் கற்பனைக் கண்ணால்-கண்டு
    கலைமகள் என்றவன் சொன்னான்
பல்வகைச் செல்வமுங் கண்டான்-தெய்வப்
    பற்றால் திருமகள் என்றான்

தோற்றமும் வாழ்தலுங் கண்டான்-செத்துத்
    தொலையும் ஒடுக்கமும் கண்டான்
நாட்படு கற்பனை கொண்டான்-மூன்றும்
    நான்முகன் மாலரன் என்றான்

பூமியுந் தேவியில் சேரும்-தோற்றப்
    பொலிவொரு மன்மதன் ஆகும்
சாமியென் றெத்தையும் கூறும்-மாந்தன்
    சாற்றிய கற்பனை பாரும்

வானுயர் கோபுரங் கட்டிக்-கோவில்
    வாயிலில் வந்துகை கட்டித்
தானொரு மண்குடில்கட்டி-வாழ்ந்து
    தலையெழுத் தென்றவன் மட்டி