168 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
அருள்தரும் ஆண்டவன் என்றான்-மக்கள் அன்பினை நெஞ்சினில் கொன்றான் பொருள்தரும் என்றுபு கன்றான்-உழைக்கும் பொழுதெலாம் சோம்பலில் நின்றான் குற்றங்கள் எல்லாம் புரிவான்-சுற்றிக் கோவிலி னுள்ளே வருவான் முற்றிய தேங்காய் தருவான்-பாலும் மொய்த்துள பூவுஞ் சொரிவான் அத்தனைப் பாவமுந் தீரும்-என்றே அங்கவன் நம்பியே கூறும் பித்தனைப்போலஎல் லாரும்-செய்தால் ‡பீழைகள் எப்படித் தீரும்? 3.10.1975
‡பீழை - குற்றம் |