| பாடுங்குயில் (பாடல்கள்) | 169 |
31 ஏறு முன்னேறு உழைப்புக்கு நல்லதோர் காலம்-வந்தால் ஓங்கிவ ளர்ந்திடு மேயிந்த ஞாலம் பிழைப்புக்குப் போடாதே தாளம்-சென்று பின்பாட்டுக் கூட்டத்தில் பாடாதே மேலும் தன்மானம் ஒன்றையே நாடு-பெற்ற தாயகந் தானுனக் கெப்போதும் வீடு எந்நாளும் பாட்டாளி யோடு-கூடி எங்கெங்குந் தோளேற்றிப் படவேண்டும் பாடு எங்கெங்குக் காணினுந் தேம்பல்-மக்கள் எவ்வெவர் வாழ்விலும் இன்பங்கள் கூம்பல் பொங்கிப்ப டர்ந்திடும் சோம்பல்-கொண்டு போற்றிவ ளர்த்ததால் வந்ததித் தீம்பு சோம்பலை மாய்த்திடல் வேண்டும்-நின்றன் தோளில்உ ழைப்பினைச் சேர்த்திடல் வேண்டும் மாம்பழக் கொட்டையைத் தோண்டி-நட்டு மாஞ்செடி தந்திடும் மந்திரம் வேண்டாம் உன்னை உழைப்பினை நம்பு-யாரோ ஓதிய வேதத்தை நம்பினால் வம்பு பொன்னை வளர்த்திடுந் தெம்பு-நாட்டிற் பூத்துக் குலுங்கிட நாடிக் கிளம்பு ஆலைத் தொழில்புரிந் தாலும்-பள்ளி ஆசிரி யப்பணி ஏற்றிருந் தாலும் சீலைத் தொழில்புரிந் தாலும்-எங்கும் சீருடன் நின்கடன் ஆற்றுக நாளும் |