பக்கம் எண் :

170கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

நாட்டையும் உன்னையுஞ் சேர்த்து-நெஞ்சில்
    நாளும் நினைத்தே உழைத்திடும் வேர்த்து
வீட்டையும் நாட்டையும் பார்த்து-தம்பி
    வீறுகொண் டேஎழு தோள்களை ஆர்த்து

நான்முகன் உன்மண்டை ஒட்டில்-ஏதோ
    நாட்டினன் என்பதை நெஞ்சைவிட் டோட்டில்
ஏன்வறு மைத்துயர் நாட்டில்?-தம்பி
    ஏறுமுன் னேறுழைப் பாலுயர் கோட்டில்

4.10.1975