10 விந்தையடா விந்தை - மாநிலந் தன்னில் நடத்தி வரும் - விந்தை மானிடர் செய்கையைச் சாற்றுகின்றேன் ஏனிவர் இவ்வணம் ஆற்றுகின்றார் - என எண்ணித் துணிந்துசொல் ஓர் முடிவு செத்த பிணத்தைப் புதைத்து வைத்த - குழி சென்றங்கு மீண்டுங் கிளறுகின்றார் பித்தரைப் போலப் பிதற்றுகின்றார் - இனிப் பேசாப் பிணத்தின் முன் பேசுகின்றார் எடுத்திடும் மேனிதனில் - படி தூசி துடைத்துடன் பூமுடித்து வேண்டிய பூசை செலுத்துகின்றார் - இந்த விந்தையை யாதென் றுரைத்திடுவேன் புகழுரை எத்தனை தான் - அட! சொல்லுக் கடங்காமல் மிக்கதடா! ஏட்டில் எழுதிய போற்றிகளும் - ஒரு எண்ணிக்கை காட்டத் தொலையுமதோ? ஆயிரம் கொட்டுகின்றார் - அணி ஆடை பல செய்து பூட்டுகின்றார் கோயிலைப் போற்பல மாளிகைகள் - கட்டிக் கொள்ளையாம் மானியம் கூட்டுகின்றார் |