பக்கம் எண் :

18கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

விந்தையடா இது விந்தையடா - என
     வேறொரு திக்கில் விரைந்து சென்றேன்
சிந்தனை அற்றவர் அங்கிருந்து - புரி
     செய்கையைக் கண்டுளம் நொந்ததடா

கண்ணொளி மங்கிய காட்சியினான் - பிறை
     கண்டது போலொரு கூனுடையான்
எண்ணிய எண்ணம் விளம்புதற்கே - ஒரு
     ஏதுவிலான் திக்கு வாயுடையான்

நடந்திடக் கால்களிலான் - அவன்
     நிற்பது வோஒரு கோலின்துணை
ஒன்றிய கோலினைப் பற்றுதற்கோ - கையில்
     உற்றவிரல்களும் முற்றுமிலான்

இத்துணைப் பண்புகள் கொண்டவனை - நலம்
     ஏற்றிட ஊசிகள் போடுகின்றார்
சித்த மருத்துவம் செய்யினுமே - அவன்
     சீரிய வாழ்வினைக் காண்பதுண்டோ

னாடையும் போர்த்துகின்றார் - நல்ல
     ஆட்சிப் பொறுப்பையும் நல்குகின்றார்
காணிக்கை எத்தனை கொட்டுகின்றார் - இந்தக்
     காட்சியைக் காணக்கண் கூசிநின்றேன்

உருக்கிடும் ஓர்குரல்தான் - செவி
     உற்றதும் சட்டென நான் திரும்பக்
கள்ளமில் லாஒரு ஏழைமகன் - பசி
     காட்டும் முகத்துடன் நின்றிருந்தான்

கோர்துணி அற்றவனாம் - கையில்
     காசு பணங்களும் அற்றவனாம்
திட்டி விரட்டினர் அன்னவனை - அவன்
     தேம்பிக் கிடப்பதைக் கண்டு நின்றேன்