172 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
‘இருக்கும் பொழுதில் பிறர்மகிழ-உன்னால் இயலும் வகையால் உதவிடுக’ குறிப்பு மொழியால் அறிவுரையை-என்பால் கூறி முடித்தாய் நினதுயிரை அழகும் மணமும் நிலையலவே-பாரில் ஆடி யடங்கும் முறையுளதே குழையும் மனத்தில் அருள்பெறுவேன்-மக்கள் குலமே உயர உதவிடுவேன் குளிரும் மலரே ஒருமொழியை-உன்பால் கூற நினைத்தேன் செவிவழியே தளரும் நிலைதான் வருபொழுதும்-மாந்தர் தமக்கே கொடுப்பேன் எனதுயிரை. 4.10.1975 |