| பாடுங்குயில் (பாடல்கள்) | 173 |
33 அவன் கண்ட பலன் சாற்றுக் கரும்பது தோற்றுப் பிறக்கிடச் சாற்றுகி றான் கவிதை-வீட்டில் சோற்றுப் பருக்கையை ஆக்கிப் படைத்திடச் சுற்றுகி றாள் மனைவி நூற்றுக் கொடுத்திடும் பாட்டுப் புனைந்துபல் நூற்றினும் மேல் தருவான்-அந்தோ ‘நேற்றுத் துவைத்தது மாற்றுத் துணியிலை’ நேரிழை யாள் பகர்வாள் கண்டு வியந்திடக் கட்டி முடித்தனன் கற்பனையால் மனையே-அந்தப் பெண்டு மயங்கிடப் பிள்ளை சுருண்டிடப் பெற்றனன் சோ தனையே உண்டு களித்திட ஊருக் களித்தனன் ஒப்பறு பா வமுதே-அந்தத் தொண்டு மனத்தவன் கண்டு சுவைத்தது தொல்லையின் வாழ் வதுவே பாடிக் கொடுத்தவன் சூடக் கொடுத்தனன் பைந்தமிழ்ப் பா மலரே-உள்ளம் வாடிக் கிடந்தனன் வாழ்விற் கலங்கினன் வண்டமிழ்ப் பா வலனே |