பக்கம் எண் :

174கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

கூடிக் கிடந்தவர் ஓடிப் பிரிந்தனர்
    கொண்டனன் ஒர் கவலை-என்றும்
ஆடித் திரிந்தவன் வாடிப் பொழிந்தனன்
    அம்ம! கண் ணீர்த் திவலை

மட்டித் தனங்களைச் சுட்டுப் பொசுக்கிடும்
    மாவலி கொண் டவன்தான்-தன்னைக்
கட்டிப் பிடித்துடல் தொட்டுச் சுவைத்திடும்
    காலனை வென் றவன்தான்

கட்டிப் பிடித்தொரு விண்ணை வளைத்ததில்
    ஏறிந டந் தவன்தான்-கண்ணீர்
கொட்டிச் சொரிந்திட மண்ணிற் கிடந்திடர்
    கூடிக்கி டந் தனனே!

5.10.1975