| பாடுங்குயில் (பாடல்கள்) | 177 |
35 கலையாம்! தொழிலாம்! திரைப்படம் என்றொரு தொழிலாம்-மாதர் மறைப்பிடம் என்பதங் கிலையாம்! உருப்படு மாஎனிற் கலையாம்!-ஐயோ உரைத்திடின் மானமும் விலையாம்! கடைத்தொழில் உண்டெனில் அதுதான்-காசு கிடைத்திடச் செய்வதும் அதுதான் புடைத்தெடுத் தாலது உமிதான்-நெஞ்சைக் கெடுத்திடச் செய்திடும் மதுதான் பதுக்கலைக் காட்டிடும் கதையாம்-அங்கே பிதுக்கிய மாதரின் சதைதான் புதுக்கலை என்றொரு விதமாம்-பண்பைப் புதைத்திட வந்திடும் சதிதான் நெறிப்படும் போக்கினில் இலையே-காம வெறிப்பட ஆக்கிடும் வலையே சரிப்பட செய்பவர் இலையே-பண்பை முறித்திடச் செய்வதொர் கலையோ? துணிந்திடும் மாதரும் உருள்வார்-கட்டிப் பிணைந்தவர் போதையில் புரள்வார் அணைந்திடில் தான்புகழ் வருமாம்-அந்தோ! அணைந்தது பெண்மையும் பொருளால் |