பக்கம் எண் :

178கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

நகைத்திட மெல்லுடல் வளைவார்-பெண்மை
திகைத்திடக் கோணலில் குழைவார்
தகைத்திடும் ஆடையைக் களைவார்-அந்தோ
புகைப்படங் காட்டிட அலைவார்

படுத்திடும் காதலர் அறையில்-உள்ளே
நடத்திடும் செய்கையைத் திரையில்
படைத்திடல் தானொரு கலையா?-பண்பை
முடித்திட வேஎழும் கொலையா?

கலைப்பெயர் சொல்லியே திரிவார்-கெட்ட
புலைத்தொழில் ஒன்றையே புரிவார்
நிலைத்திடு சிந்தனை யறிவார்-இங்கே
தலைப்படி னேநலம் உருவாம்

மடத்தனம் மிக்கனர் மடவார்-ஆண்கள்
தடுத்திலர் முற்பட *மிடைவார்
குடித்தனந் தானுருப்படுமா?-அந்தப்
படத்தொழில் தான்சரி படுமா?

6.10.1975


* மிடைவார் - நெருக்கமாகக் கூடுவார்