பக்கம் எண் :

180கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

வீணிற் பண்பு செப்பினால்-நாங்கள்
    விசிறி சேர்ப்ப தெப்படி?
நாணம் மானஞ் செப்பினால்-நாங்கள்
    நடிகை யாவ தெப்படி?

கலைகள் கலைகள் என்றெலாம்-சொல்லும்
    கதையை நீங்கள் நம்பலாம்
கலையும் ஆடை ஒன்றலால்-வேறு
    கலையின் சாயல் கண்டிலோம்

கலையின் நுண்மை கற்றுளார்-வாழக்
    கையில் என்ன பெற்றுளார்?
உலகம் எங்கள் கையிலே-மக்கள்
    உள்ளம் எங்கள் மெய்யிலே

7.10.1975