182 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
38 காதற் காவியம் இலக்கியம் ஒன்று படைப்போம்-காதல் இலக்கணம் முழுமையும் அதனுள் அமைப்போம் - இலக்கியம்... மலர்த்தொடை அணிந்திடும் மாதே வருவாய் மனத்தெழும் உணர்ச்சியை இதழ்வழி தருவாய் - இலக்கியம்... ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு கதையாம் ஒன்றினில் ஒன்று விஞ்சிய சுவையாம் எவ்வகைத் தடையும் இடுபவர் இலையாம் எடுத்ததை இரவெலாம் படித்திடும் கலையாம்
- இலக்கியம்... படித்திடப் படித்திடப் புதியன கிடைக்கும் பலமுறை முடிப்பினும் விழைவினைக் கொடுக்கும் படித்தபின் நினைப்பினில் இனிமையைப் படைக்கும் பயனாய் இலக்கியப் பரிசிலும் கிடைக்கும்
- இலக்கியம்... 10.9.1976 |