பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)183

39
கவிதை உலகு

என்னை மறந்தேன் உன்னுள் கலந்தேன்
எழுந்தது புதுவித உணர்வு-பின்னே
எத்தனை எத்தனை கனவு- கண்ணே
இதுதான் கவிதை உலகு

விண்ணில் மிதந்தேன் மண்ணை மறந்தேன்
விரிந்தது கற்பனைச் சிறகு-வான
வெள்ளிகள் தண்முகில் உறவு-தந்த
விளைவே கவிதை உலகு

நெஞ்சம் நெகிழ்ந்தேன் அன்பில் நனைந்தேன்
நிறைந்தது வளர்ந்தது கனவு-இன்பம்
நிகழ்த்திய நாடக நினைவு-தந்த
நிழலே கவிதை உலகு

சூழல் துறந்தேன் யாவும் மறந்தேன்
சுழன்றது பறந்தது கவலை- அடடா
சுரந்தது நெஞ்சினில் உவகை-அந்தச்
சுவடே கவிதை உலகு

20.9.1976