| பாடுங்குயில் (பாடல்கள்) | 187 |
42 தேன் கூடு (தமிழ்நாட்டு அமைச்சரவை கலைக்கப்பட்டபோது பாடியது) தென்மலைச் சாரலில் தேன்நிறை கூடு-கட்டத் தேன்சுரும் பாயிரம் பட்டன பாடு பொன்மலை மீதினில் பூமலர்க் காடு-முற்றும் போய்வந்து தேன்மிக தேக்கிய வீடு புன்மனப் பிள்ளையர் கண்டழுக் காறு-கொண்டு பொங்கினர் வீசினர் வீண்மணற் சேறு நன்மன வண்டுகள் கொண்டன வீறு-சென்று நாண்மலர் தேடின நாடொறும் நூறு ஆயிரம் சூழ்ச்சிகள் செய்தனர் கூடித்-தீயர் ஆடினர் நாடகம் மேடையில் பாடி போயின போயின சூழ்ச்சிகள் ஓடி-மாயப் பொய்ம்மைகள் வீழ்ந்தன வேருடன் வாடி ஆனிரை மேய்ந்திடும் ஆங்கொரு காடு-தன்னில் ஆடிடும் பெண்மகள் தீங்குயிற் பேடு வானுயர் சாரலில் தேன்விளை கூடு-கண்டு வாயுற வாழ்த்தினள் அன்புளத் தோடு வாழ்த்திய வாழ்த்தொலி பிள்ளையர் காது-புக்கு வாட்டிட எண்ணினர் வேறொரு சூது வீழ்த்திட வேண்டினர்; ஆமெனும் மாது-கல்லை விட்டெறிந் தாள்மலைச் சாரலின் மீது |