பக்கம் எண் :

188கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

வீசிய கல்நுனி கூட்டினில் பட்டுக் கீழே
வீழ்ந்திடும் தேன்துளி பிள்ளையர் தொட்டுப்
பூசினர் நாவினில் கூசுதல் விட்டுப்-பின்னும்
பூமியில் தூற்றினர் நாநயம் கெட்டு

கோடுயர் தென்மலை தாழ்வதும் இல்லை- தேனின்
கூடுள சாரலும் வீழ்வதும் இல்லை
காடுகள் மேடுகள் பூத்துள முல்லை-மொய்த்துக்
கட்டிடும் *தேனினம் கூட்டினை †ஒல்லை

தேனினம் சஞ்சலம் விட்டன கூடி- மீண்டும்
தேடிடும் பாடிடும் பூவினை நாடி
வானுயர் மாமலைக் காவினில் பாடிச்-சென்று
வந்திடும் வென்றிடும் வாகைகள் சூடி

28.8.1976


* தேனினம் - தேனீக்கள்.
† ஒல்லை - விரைவாக