| பாடுங்குயில் (பாடல்கள்) | 189 |
43 அவன் தான் இறைவன் தனக்கென வாழ்பவன் ஒருவன்-அவன் தாங்கிய வடிவம் மானிட உருவம்
- தனக்கென தனக்கும் பிறர்க்கும் வாழ்பவன் மனிதன்-அவன் தந்ததோர் பிறவியைப் போற்றிடும் இனியன்
- தனக்கென தனக்கென முயலான் பிறர்க்கென முயல்வான் தன்னையும் பொன்னையும் அவர்க்கெனத்தருவான் மனத்துயர் சூழும் பொழுதினும் அயரான் மதியான் தன்னலம் அவன்தான் இறைவன்
- தனக்கென நிலத்தினில் தோன்றும் எப்பொரு ளாயினும் நிறைபயன் பிறர்பெறப் பயன்பட லாயின புலப்படும் அறிவோ ஆறுள வாயினும் புரிந்திலன் பொதுநலம் அவனா மானிடன்?
- தனக்கென 29.9.1976 |