பக்கம் எண் :

190கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

44
உலக நாடகம்

உலகம் ஒரு நாடகம் - அதில்
ஒவ்வொரு மனிதனும் போடுவான் வேடம்

- உலகம்

நிலவிய அரங்கம் இல்லாமல் நடிப்பான்
நினைப்பதை முடித்திடச் சுரங்களும் பிடிப்பான்

- உலகம்

இரவினில் போடும் எழில்மிகு வேடம்
எதுதான் காணும் பகல்வரும் போது?
பொருள்வரும் வேளை உறவுகள் கூடும்
போனபின் எங்கோ புகுந்திட ஓடும்

- உலகம்

தாளமும் உண்டு மேளமும் உண்டு
தாந்திமி தோமென ஆடலும் உண்டு
வேளைகள் கண்டு பாடலும் உண்டு
விடிந்ததும் ஓடும் கிடைத்தது கொண்டு

- உலகம்

'b6சொல்லதில் வேந்தன் நடித்திடும் போது
சொன்னதைத் தாண்டும் திரைவிழும் போது
நல்லவன் மாந்தன் கதிர்வரும் போது
நாயினும் கீழாம் அதுவிழும் போது

- உலகம்

அரங்கினில் நின்றால் அவனொரு பாரி
அதன்பின் என்றால் படு *முல்லை மாறி
இரங்கிடச் செய்வான் இனியவை கூறி
ஏய்த்தபின் செல்வான் பிறர்நலம் வாரி

- உலகம்

29.9.1976


'b6 சொல்வதில் வேந்தன் -அரிச்சந்திரன் * முல்லை மாறி - இயல்பு கெட்டவன்