| பாடுங்குயில் (பாடல்கள்) | 193 |
46 கவி மயக்கம் ஓய்ந்து போன என்னுள்ளம்-உன்னுள் தோய்ந்த போதுதான் இன்பம்! இன்பம்! - ஓய்ந்து காய்ந்து வாடுமென் வாழ்வில்-இன்பக் காதல் நீருடன் சூழ்வாய்! சூழ்வாய்! - ஓய்ந்து கனவும் இல்லை நனவும் இல்லை கானல் நீரா? அதுவும் இல்லை மனமும் மயங்கும் மதியும் மயங்கும் மதுதான் என்றால் அதுதான் இல்லை - ஓய்ந்து இரவும் இல்லை பகலும் இல்லை இணைவிழி தாமோ உறங்கவும் இல்லை உறவும் இல்லை பகையும் இல்லை உளமொரு கடலோ? கரையே இல்லை - ஒய்ந்து விண்ணும் இல்லை மண்ணும் இல்லை வெற்றிட மோஎனில் அதுவும் இல்லை கண்ணில் காணாக் கற்பனை இல்லை கவிமகள் உன்னைப் போல்பவள் இல்லை - ஓய்ந்து உயிரில் உணர்வாய் உணர்வில் உயிராய் உளமெனும் அரங்கில் திருநடம் புரிவாய் பயிரில் மணியாய் மணியுள் பயிராய் பயில்பவ ளேநீ மருவிட வருவாய் - ஓய்ந்து 30.9.1976 |