196 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
49 அவளொரு காவியம் அவளொரு புதிய காவியம்-என்றும் அவள்தான் எனக்குயி ரோவியம் - அவள் கவரும் படியொரு நடையழகு-நெஞ்சில் கலந்தே சுவைதரும் மொழியழகு-கொண்ட - அவள் கைவளை சிலம்புடன் சந்தங்கள் காட்டும் காதொடு தோள்கள் அணிநலங் கூட்டும் மெய்யெழில் வாயிதழ் வண்ணங்கள் சேர்க்கும் மெல்லிய அவள்குரல் இன்னிசை வார்க்கும் - அவள் கருவிழி ஓரங் காதலைக் கண்டேன் கனியிதழ் ஓரம் நகைஎழில் கண்டேன் சுருள்குழல் மலரொடு தோள்களி ரண்டும் சுமந்திடும் இடைதனில் அவலமுங் கண்டேன் - அவள் பால்மொழி ஊடலில் வெகுளியைக் கண்டேன் பணிந்தபின் கூடலில் மருட்கையைக் கண்டேன் நால்வகைக் குணங்களுள் அச்சமுங் கண்டேன் நாணும் பொழுதொரு நாடகம் கண்டேன் - அவள் பயிலும் பொழுதோ நடுஇர வாகும் பாலும் பழமும் சரிநிகராகும் துயிலும் பொழுதோ ஒருசிறி தாகும் தொடரும் சுவையோ மிகப்பெரி தாகும் - அவள் 18.11.1976
நகை, அவலம், வெகுளி, மருட்கை, அச்சம் முதலிய காப்பியச் சுவைகள் சுட்டப்படுகின்றன. |