பக்கம் எண் :

198கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

51
தமிழ் பாடத் தடையா?

தமிழே உன் புகழ்பாட வாழ்வெடுத்தேன்-ஆசை
தணியாமல் இசைகூட்ட யாழெடுத்தேன்

- தமிழே

இமைமூடும் விழியாலே எதுகாண முடியும்?
எழில்யாழை உறைமூடின் எதுபாட இயலும்?

- தமிழே

நரம்பேழும் நலமாக முறுக்கேற வைத்தேன் - நீ
நரம்போடு விளையாடும் விரல்சோர வைத்தாய்
திறம்பாடி உயிர்வாழுங் குறியோடு நின்றேன்-நீ
திரும்பாமல் முகங்கோடிச் சிலையாக நின்றாய்

- தமிழே

சுமையாகத் துயர்வந்தே எனைமோதல் முறையா?
சுரம்பாடும் நரம்பொன்று பகையாதல் சரியா?
எமையாளுந் தமிழேஉன் புகழ்பாடத் தடையா?
இரங்காமல் இருக்கின்றாய் இதுதான்உன் விடையா?

- தமிழே

20.11.1976