பக்கம் எண் :

202கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

54
அறிஞர் வாழ்க!

அறிஞர் வாழ்கவே-பேர்
அறிஞர் வாழ்கவே-இசைப்பேர்
அறிஞர் வாழ்கவே

- அறிஞர்

நிறையும் ஞானம் பொழியுங் கானம்
சொரியும் மேகம் தவழும் வானம்

- அறிஞர்

திருவாய் மலர்ந்தால் ஏழிசை மணக்கும்
தேன்மழை போலது காதினில் இனிக்கும்
ஒருகால் கேட்பினும் நெஞ்சினை உருக்கும்
ஓ!ஓ! அவர்புகழ் என்றுமே இருக்கும்

- அறிஞர்

இசையின் மயமாய் மேடையில் இருப்பார்
இசைத்திடும் பாடலில் இரண்டறக் கலப்பார்
அசையும் உடலால் இசை நயம் கொடுப்பார்
அவரே மதுரைச் சோமுவென் றுரைப்பார்

25.11.1976

- அறிஞர்