| பாடுங்குயில் (பாடல்கள்) | 203 |
55 யார் பொறுப்பார்? (நெருக்கடி நிலையிற் பாடியது.) அன்றொரு காவியம் ஆக்கி வைத்தேன் - அதில் ஆயிரம் கற்பனை தேக்கி வைத்தேன் இன்றொரு பாடலை ஆக்குகின்றேன்-மன ஏக்கத்தை நானதில் தேக்குகின்றேன் செந்தமிழ் வாழ்ந்திடச் சொல்லிவைத்தேன் -அதில் செய்வன யாவையும் அள்ளி வைத்தேன் வந்தது வாழ்வெனப் பாடிநின்றேன்-இன்று வந்தது கண்டுளம் வாடுகின்றேன் காவியம் பற்றியே தூற்றுகின்றார்-கொடுங் காரியம் என்னென்ன ஆற்றுகின்றார் நாவினை எப்படி மாற்றுகின்றார்-அட! நாட்டினில் பொய்ம்மையை ஏற்றுகின்றார் கற்பனை யாவையும் யாரழித்தார்?- அந்தக் காவிய ஏட்டினை யாரெடுத்தார்? பற்பலர் போற்றிடப் பேரெடுத்த-அந்தப் பாக்களை மாற்றிடின்யார் பொறுப்பார் 26.11.1976 |