204 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
56 உறங்கிய வீணை (நெருக்கடி நிலையிற் பாடியது) உறங்கிய வீணையில் அடங்கிய ஓசையை ஒருநாள் கைவிரல் எழுப்பும்-செவி மறவா இனிமையைக் கொடுக்கும்-அது மாந்தரின் நெஞ்சினில் நிலைக்கும் எழுப்பிய ஓசையை அடக்கிடும் ஆசையில் எழுந்தால் மனமிகத் துடிக்கும்-தரும் இடரால் விழிபுனல் வடிக்கும்-பின் சுடர்போல் உணர்வுகள் வெடிக்கும் மீட்டிய விரல்களை வாட்டிட நினைத்தால் மேதினி எவ்விதம் பொறுக்கும்?-அது தீ தென வேசொலி வெறுக்கும்-பின் தீமைகள் யாவையும் ஒறுக்கும் இனிமையில் மூழ்கிய இருசெவி அடைத்தால் இசைதனை மனமா மறக்கும்?-ஆசை எழுமடங் கலவோ பிறக்கும்!-பின் இடர்தரும் யாவும் பறக்கும் 26.11.1976 |