| பாடுங்குயில் (பாடல்கள்) | 205 |
57 ஐந்து பூதம் நீரும் நெருப்பும் காற்றும் வானும் நிலமும் சேர்ந்தே உலகம தாகும் யாரும் இவற்றைக் கூறுகள் செய்யார் யாவும் இங்கே பொதுமையு மாகும் என்றன் நீரென உன்றன் நீரென எல்லைக் கோடுகள் போடுவதில்லை கனறும் நெருப்பில் உரிமைகொண் டாடக் கரைகள் அமைத்துக் காட்டுவதில்லை தென்றல் கொண்டல் என்றன ரன்றித் திரியும் காற்றைப் பிரித்தவ ரில்லை என்றும் வானில் எல்லைக ளமைத்தே எனதென் றிசைத்தவர் எவரும் இல்லை அஞ்செனும் பூதமும் ஆருயிர்ப் பொதுமை ஆயினும் மாந்தன் ஆக்கினன் புதுமை எஞ்சிய நிலத்தில் எல்லைகள் இட்டான் இதுதனி யுடைமை எனவிதை நட்டான். 1.4.1982 |