| பாடுங்குயில் (பாடல்கள்) | 207 |
59 ஏமாளி உலகம் எழுதிட நம்பும் பேசிட நம்பும் ஏமாளி உலகமடா-அதைப் பழுதற ஆய்ந்து பார்த்திடத் தெரியாப் பாழும் உலகமடா அச்சினில் வந்தால் அதுதான் வேதம் அப்படிப் பார்க்குமடா-சிலர் மெச்சிட மேடை ஏறிடின் அவனை மேலவன் ஆக்குமடா ஒருமுறை சொன்னால் உண்மையைப் பொய்யென் றுடனே இகழுமடா-பொய்யைப் பலமுறை சொன்னால் மெய்யென நம்பிப் பணிந்தே புகழுமடா யாரது சொன்னார் ஏனது சொன்னார் என்றே அறிவதில்லை-அட! யாரெது சொலினும் ஆறறி வுள்ளார் ஆடுகள் ஆகினரே 26.11.1976 |