| பாடுங்குயில் (பாடல்கள்) | 209 |
61 வாழுங் கவிஞன் கனவுகள் காண்பான் கவிஞன்-ஆனால் கண்விழி உறங்குவ தில்லை நனவுகள் ஆகும் புவியில்-அவனை நன்மைகள் தொடர்வது மில்லை பஞ்சணை போலொரு நினைவு-அங்கே பகலிர வெல்லாங் கனவு நெஞ்சினில் ஊறிடுந் தினவு- அதுதான் நீள்புகழ்க் காவியப் புனைவு மதியொடு முகிலொடு மிதப்பான்-அந்த மயக்கினில் நாள்பல கிடப்பான் புதியன புனைந்திடத் துடிப்பான்-அந்தப் போதையில் ஆயிரம் படைப்பான் மழலைகள் பேசிடும் மதலை-காணின் மகிழ்ந்திடும் அவனொரு மதலை பழகிய யாழொடு குழலைக்-கேட்டால் பாவலன் ஏழிசை நிழலே நிறமலர் மணமுடன் குலுங்கும்-கவிஞன் நெஞ்சொரு வண்டென மயங்கும் பறவைக ளாயிரம் பறக்கும்-கவிஞன் பறந்திடச் சிறகினை விரிக்கும் |