பக்கம் எண் :

210கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

இயற்கையின் அழகுகள் சிரிக்கும்-அவற்றுள்
இணைந்தவன் நரம்புகள் துடிக்கும்
மயக்குறும் உணர்வுகள் நடிக்கும்-கவிஞன்
வாயித ழோகவி உதிர்க்கும்

எளியவர் விழிபுனல் சிந்தும்-காணின்
இனந்தெரி யாதுக லங்கும்
நெளிகடல் போலுளம் பொங்கும்-துயரை
நீக்கிடப் பாடல்வ ழங்கும்

கொடுமைகள் கண்டுளம் வாடும்-உணர்வு
கூடிட வாய்கவி பாடும்
படுமிடர் நீங்கிட ஆடும்-ஆனால்
பாவலன் துயர்தான் நீடும்

தோயுறும் துயரிடை வாழும்-அந்தத்
தூயவன் சுழலுவன் நாளும்
ஆயினும் கற்பனை சூழும்-அவன்கவி
ஆயிரம் ஆண்டுகள் வாழும்

16.12.1976